search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாவலர்கள் துப்பாக்கி சூடு"

    இலங்கையில் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார் இன்று கைது செய்தனர். #SrilankaShooting #ArjunaRanatunga
    கொழும்பு:

    முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் மந்திரியுமான அர்ஜூனா ரணதுங்க நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.

    அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த மந்திரியின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்நிலையில், பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய துறை முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இலங்கையில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில், முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்க கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SrilankaShooting #ArjunaRanatunga
    இலங்கையில் பெட்ரோலிய துறை அமைச்சக பணியாளர்கள் மீது அமைச்சரின் பாதுகாவலர்கள் இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். #SrilankaShooting
    கொழும்பு:

    இலங்கையில் அதிரடியாக பிரதமரை மாற்றிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக நியமித்துள்ளார். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்கேவின் அமைச்சரவை நீக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவாளரான இலங்கையின் பெட்ரோலிய வனத்துறை முன்னாள் அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அர்ஜூனா ரணதுங்க இன்று தனது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ஜூன ரணதுங்கவை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.



    இதனால் ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 ஊழியர்கள் காயமடைந்தனர்.

    அதில் ஒருவர்மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இரு ஊழியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில், பெட்ரோலிய அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கி  சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. #SrilankaShooting
    ×